Saturday 23 March 2013

பாரதியாரின் படைப்புகள்:..வாழ்ந்த காலம்: 11.12.1882



-
பாரதியின் முதல் பாடல் “தனிமை இரக்கம்” வெளியிட்ட பத்திரிக்கை
- மதுரையிலிருந்து வெளிவந்த “விவேக பானு” என்ற பத்திரிக்கை.
*  பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி – மதுரை சேதுபதி
உயர்நிலைப் பள்ளி(1904)
*  பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல்
கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் – இந்தியா என்ற வாரப்
பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)
*  பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும்,
சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.
*  பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா
பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.
*  பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில்
அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த
இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
*  பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை
அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999
அன்று திறந்து வைக்கப்பட்டது.




 பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 – 11.09.1921(அகவை 38)
*   பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
*   பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் – லெட்சுமி அம்மாள்
*   பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.
*   பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
*   பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.
*   பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் – வ.ரா(ராமசாமி அய்யங்கார்)
*   பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.
*   பாரதி என்பதன் பொருள் – கலைமகள்.

No comments:

Post a Comment

THANK YOU