Thursday 31 January 2013

காதல் பிரியர்களே உங்கள் காதலை பரிமாறும் அழகான தருணங்கள்


Kadhal piriyarkalae unkal kathalai parimaarum alakaana tharunankal! Kadhal enra vachantham anaivarin vaalkkaiyilum varuvathillai. aachirvathikkappaddavarkalukku maddumae Kadhal vaaykkum. Kadhal vayappaddiruppavarkal anaivarum iraku mulaiththathu poala chathaa vaanaththil mithanthu kondiruppaarkal...

காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.
காதலனிடம் இருந்து சின்ன எஸ்.எம்.எஸ் வந்தாலே அன்றைய சந்திப்பை பற்றி அந்த நொடியில் இருந்தே கனவு காண தொடங்கிவிடுவார்கள். காதல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. ஆனால் குறிஞ்சிப் பூவாய் கிடைத்த காதலை எத்தனை பேர் வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் 50 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் கூறுவர்.
படிக்கும் போது தோன்றிய காதல் பணிச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணங்களினால் படிப்படியாக மறைந்து போவதும் உண்டு. அப்படியே வெற்றி பெற்று அது திருமணம் வரை கணிந்தாலும் நாளடைவில் கசந்து காதல் காணமல் போய்விடும். எனவே காதலித்து திருமணம் செய்தவர்கள் கடைசி வரை காதலை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்:
திருமணம் முடிந்த உடன் முதலில் செய்ய வேண்டியது இருவரின் குடும்பத்தைப் பற்றியும், வருங்காலத்தைப்பற்றியும் பேசவேண்டும். இருவரும் இணைந்து எதிர்காலத்தை பற்றி பேசுவதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். காதலும் உறுதிப்படும்.
காதலிக்கும் போது என்னென்னவோ பரிசுகள் கொடுத்திருக்கலாம் திருமணத்திற்குப் பிறகும் அது தொடரவேண்டும். பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் என சிறப்பு நாட்களில் மட்டும்தான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. துணையை குஷிப்படுத்த அடிக்கடி சர்ப்ரைஸ் பரிசு கொடுங்கள்.
காதலிக்கு நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுப்பொருள் உங்களின் பரிசுத்தமான அன்புதான். எனவே இதயப்பூர்வமாக உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
பேசுவது நீங்களாக மட்டுமே இல்லாமல் கேட்பவராகவும் இருங்கள். உங்கள் காதலியை அதிகம் பேச விடுவது காதலுக்கு அதிக நன்மை பயக்கும். எப்பொழுதும் பிறரிடம் இருந்து மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கொடுப்பவராகவும் இருங்கள்.
உம்மென்று இருக்க வேண்டாம். அடிக்கடி சிரித்து பேசி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக ஜோக்கடிக்கிறேன் என்ற பெயரில் கடித்து கஷ்டப்படுத்த வேண்டாம்.
விடுமுறை தினம் என்றாலே தூங்கிதான் பொழுதை கழிக்க வேண்டும் என்பதில்லை. திட்டமிட்டு எங்காவது சென்று வாருங்கள். காதலை புத்துணர்வாக்க இது சிறந்த வழி.
எப்பொழுதும் கையில் சாக்லேட் வைத்திருங்கள். அவசரகாலங்களில் ஆபத்பாந்தவனாக உதவுவது அந்த சாக்லேட்தான். சண்டையின் போது சமாதானத் தூதுவனாக உதவுவதும் அந்த சாக்லேட்தான்.
வாழ்க்கைத் துணையை உடல் ரீதியாக பார்க்காதீர்கள். உணர்வு ரீதியாக பார்ப்பதே காதலை வலுப்படுத்தும். அடிக்கடி பாராட்டுங்கள். அது அன்பை ஆழப்படுத்தும். எந்த சந்தர்ப்பத்திலும் மட்டம் தட்டி பேசாதீர்கள். முக்கியமாக உங்கள் துணையைப் பற்றி நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வார விடுமுறையை கொண்டாடுங்கள், அன்பை பரிமாறுங்கள். அது இருவருக்குமிடையேயான காதலை வளர்க்கும். மனைவியோ, காதலியோ பேசும் முன்பு யோசித்து பேசவும், எந்த ஒரு வார்த்தையும் காதலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது. அலுவலகத்திற்கு இருக்கும் சமயங்களில் கூட ஐ லவ் யூ எஸ்.எம்.எஸ் அணுப்பலாம். அது அலுவலக மன உளைச்சலை சற்றே தணிக்கும். உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
இருவருக்கும் பிரச்சினை என்றால் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் ஈகோ வேண்டாம். பிரச்சினையை தீர்க்க விட்டுக்கொடுப்பவர் நீங்களாக இருங்கள். பிரச்சினை தோன்றிய இடம் காணமல் போய்விடும்.

விடிவெள்ளி

ஒரு தன்னம்பிக்கை நூலில்

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப் பழக்கமுள்ளவன் - எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து - மிரட்டி - பணம் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பான். பிறருக்குத் தொல்லைகொடுத்து இன்பம் பெறும் ஸாடிஸ்ட் அவன். மற்றவன் நல்லவனாக சமூகத்தில் மதிக்கப்படுபவனாக - நல்ல குடும்பத்தலைவனாக இருந்தான். அருமையாக குடும்பத்தைப் பராமரித்து வந்தான்.

ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. "ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர்போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்கக் காரணம் என்ன", என ஊரில் இருப்பவர்களுக்கு வியப்பு.

ஒரு பெரியவர் குடிகாரமகனையும், நல்லகுடும்பவானாகியவனையும் இப்படிக்கேட்டார். "உன் நடத்தைக்கு யாரப்பா காரணம்?". இருவரும் ஒரே பதில்தான் சொன்னார்கள், "என்னுடைய நடத்தைக்குக் காரணம் என்னுடைய அப்பாதான்". "உன் அப்பா என்ன செய்தார்", என்று குடிகாரனைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார்.

குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை. அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன். அதனாலே நானும் குடிகாரனாகிவிட்டேன். மோசமான தகப்பனின் மகனான நான் மோசமாகிவிட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான். "உன் அப்பா என்ன செய்தார்", என்று நற்கணவானைக் கேட்டபோது சொன்னான். "அவர் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பகலிலும், இரவுகளிலும் குடித்துக் கொண்டே இருப்பார்.

குடும்பத்தினரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார். அடிகளுக்குப் பஞ்சமில்லை. அதனாலே நான் குடிக்ககூடாது, குடிகாரனாகிவிடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான் மோசக்காரனாக இராமல் - என்னுடைய பிள்ளைகளுக்கு நல்லவனாக இருக்க எண்ணினேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம்", என்றான்.

நீதி : எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை நிகழ்வுகளும் உண்டு. எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு. அன்னப்பறவை போல நேர்மறையான கருத்துக்களையே நாம் எதிர்நோக்குவோமாக.

ஒரு தன்னம்பிக்கை நூலில் (ஆங்கிலத்தில் வெளிவந்தது) இருந்து மொழிமாற்றப்பட்டது.

Wednesday 30 January 2013

இல்லை'என்று சொல்.



சோம்பேறி கையேந்தினால்,'இல்லை'என்று சொல்.
பெரியவர்களை அவமதிப்பவன்,கல்வி கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
காரணம் அந்தக் கல்வி அவனை மேலும் அகங்காரனாக்கும்.
அழகான பெண் வழிய வந்து காதல் கேட்டால் ,'இல்லை என்று சொல்.
அது பல ஆபத்துக்களை தவிர்க்கும்.
பணக்காரன் அறிவுரை கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அவன் உன்னை அவமதிப்பதற்கே கேட்பான்.
ஏழை இலவச உதவி கேட்டாளல் ,'இல்லை'என்று சொல்.
அவன் தொடர்ந்து உதவி கிடைத்தால் பிச்சைக்காரன் ஆவான்.
கடவுள் உன்னிடம் பக்தியைக் கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அப்படிக் கேட்பவர் கடவுளாக இருக்க மாட்டார்.
                                       --ஒரு சீனக் கவிதையின் கருத்து.

முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.
கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.
போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.
பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.

Tuesday 29 January 2013

டென்சன் இல்லாமல் இருக்க...




டென்சன் இல்லாமல் நீங்கள் இருக்க வேண்டுமா?
*உங்களை நீங்களே பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.
*உங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருங்கள்.
*நீங்கள் நினைப்பதை விட நீங்கள் பெருமையுள்ளவர் என்பதே உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
*ஏதாவது குறைபாடு இருந்தாலும் அது கவலைக்குரியது அல்ல.நிவர்த்திக்க முடியும் என்பதை நம்புங்கள்.
*கவலைப் படுவதால் மன நிலையும் உடல் நிலையும் பாதிக்கப்படும் என்பதை உணருங்கள்.
*எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
*உணவு தவிர வாழ்விற்கு,இயற்கை அழகு,இசை,கலைகள் எல்லாம் தேவை என உணருங்கள்.
*நல்ல நண்பர்களைக் கொண்டிருங்கள்.
*நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும்.
*மகிழ்ச்சியாக இருப்பதே உங்கள் பிரதான விருப்பமாக இருக்க வேண்டும்.
*வாழ்க்கை வாழ்வதற்கே:வாழ்வதை நேசியுங்கள்.
*மகிழ்ச்சியாய் இருப்பதற்கு ஏற்றார்போல வாழ்வைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

தெரிய வேண்டாமா?


ஆப்பிரிக்கா என்றால் வெயில் நாடுஎன்று பொருள்'
******
பத்து வயதுப் பையனுக்குஒரு காயம் குணமாக ஆறு நாள் ஆனால் அதே அளவு காயம் ஆற இருபது வயது இளைஞனுக்கு பத்து நாட்களும்,முப்பது வயதுக்காரருக்கு பதிமூன்று நாட்களும்,நாற்பது வயதுக்காரருக்கு பதினெட்டு நாட்களும்,அறுபது வயதுக்காரருக்கு முப்பத்திரண்டு நாட்களும் ஆகும்.
******
வாயில் சுரக்கும் உமிழ் நீரில் ptylin என்ற என்சைம் உள்ளது.இது ஜீரணத்திற்குத் தேவையானது.இது carbohydrate ஐ சர்க்கரை ஆக மாற்றுவதற்குச் சிறிது நேரம் பிடிக்கும்.எனவே உமிழ்  நீருடன் உணவை நன்றாகக் கலக்கச் செய்யவும், சிறிது நேரம் ptlyin ஐ ஆக்கத்திற்கு உட்படுத்தவும் உதவும் வகையில் பற்களால் உணவை சிறிது நேரம் நன்றாய் அரைத்து மென்று கொண்டிருப்பது நல்லது.எனவே உணவை அவசரம் அவசரமாக விழுங்கக் கூடாது.
******
செண்டுகளின் நறுமணத்திற்குக் காரணம் அவற்றில் ஆம்பர் கிரீஸ் எண்ணும் பொருள் இருப்பதுதான்.இந்த ஆம்பர் கிரீஸ் ஒரு வகை திமிங்கலங்களின் குடலில் மட்டுமே உற்பத்தி ஆகிறது.
******
சிவப்பு நிறத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்து விட்டு வெள்ளை நிறத்தைப் பார்த்தால் பச்சையாகத் தோன்றும்.நீல நிறத்தை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துவிட்டு வெள்ளை நிறத்தைப் பார்த்தால் மஞ்சளாகத் தெரியும்.
******
ஒட்டகச்சிவிங்கிக்குக் குரல் கிடையாது.
******
நிழல் உருவத்தை ஆங்கிலத்தில் சிலூட் (silhoutte)என்பார்கள்.இது ஒரு கொடியவனின் பெயர்.பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் நிதி அமைச்சராக இருந்த இவன் கடும் வரிகளைப் போட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவன்.'எங்கள் நிழலைத்தவிர வேறு எதையும் விட்டு வைக்காமல் இப்படி வரி போடுகிறானே!'என்று மக்கள் நொந்து கொண்டனர்.அதிலிருந்து நிழலை இகழ்ச்சியாக குறிப்பிடும் சொல்லாக சிலூட் நிலை பெற்று விட்டது.
******

அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,

அன்பு மகனுக்கு,
அன்பு மகளுக்கு,
*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
'எனக்குத் தெரியாது',மன்னிக்கவும்',என்பதை சொல்லத் தயங்காதே.

பொன்மொழிகள்

பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட
உண்மையால் அறைவதே மேலானது.
**********
பிறருக்குப் பயன்படுங்கள்.
பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.
**********
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
**********
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
**********
உங்களுக்கு  மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.
**********
நான்மறையைக் கற்றவனல்ல ஞானி.
'நான்'மறையக் கற்றவன் தான் ஞானி.
**********
உறவால் வரும் அன்பைவிட
அன்பால் வரும் உறவே புனிதமானது.
**********
விழுவதெல்லாம்
எழுவதற்குத்தானே தவிர
அழுவதற்காக அல்ல.
**********
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.
**********
பலமான மழை பெய்யும்போது
லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே.
உறுதியான குடை வேண்டும் என்று வேண்டு.
**********


மக்கள் ஒரு அற்பனைச் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம்.
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
கெட்ட பழக்கம் முதலில் யாத்ரிகனைப்போல வரும்.
பிறகு விருந்தாளியாகி,இறுதியில் அதுவே முதலாளி ஆகிவிடும்.
**********
முள்,கரண்டி,கத்தி ஆகியவற்றின் துணை கொண்டு உண்பது,மொழி பெயர்ப்பாளரை துணைக்கு வைத்துக் கொண்டு காதலிப்பதற்கு  ஒப்பாகும்.
**********
எந்தப் பொருளையும் மலிவாக வாங்கக் கூடிய நேரம் போன வருடம்.
**********
இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தி அடைவது சரிதான்.
ஆனால் இருக்கிற திறமை போதுமென்று நினைப்பது சரியல்ல.
**********
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
**********
இன்றைய என் பசிக்கு உணவு அளிக்காது பிறகு சொர்க்கத்தைக் கொடுக்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
**********
மிதவாதி என்பவன் யார்?உட்கார்ந்து யோசிப்பவன்.என்ன,உட்காருவது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
**********
உடனடியாகச் சீர்திருத்த வேண்டியது எது?அடுத்த வீட்டுக்காரனின் குணம்.
**********
சீட்டுக்கட்டை சரியாகக் கலைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்,நம் கைக்கு நல்ல சீட்டு கிடைக்கும் வரை.
**********
நீ சொல்வது சரிதான் என்று ஒருவர் என்னிடம் சொன்னால் உடனே அது சரியில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.
**********
ஒரு ஆளையோ,ஒரு தேசத்தையோ,ஒரு கொள்கையையோ வெறுக்க வேண்டும்.அதில்தான் ரொம்பப்பெருக்கு சந்தோசம்.
**********
காமம் என்பது எப்போது ஆரம்பமானது?நிர்வாணமாக இருந்த மனிதர்கள் ஆடை கட்டத் துவங்கியபோது.
***********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தி ஆகி விடுகிறது.
**********
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறுகின்றன.
**********
வெற்றியில் நிதானம் போகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
**********
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதற்குப் பெயர்தான்  நிம்மதி.
**********
கேட்டால் சிரிப்பு வர வேண்டும்.
சிரித்தால் அழுகை வர வேண்டும்.
அதுதான் நல்ல நகைச்சுவை.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு
எந்த விமரிசனத்தையும்
தூக்கி எறியும்  தைரியம் வர வேண்டும்.
**********
எந்த வேலை உனக்குப் பழக்கமானதோ,
அந்த வேளையில் புதுமைகள் செய்யத் தவறாதே.
**********
,                                                  --கண்ணதாசன்
11.11.11.இது எனது ஆயிரமாவது இடுகை.இதுவரை எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
*********************************************************************
கடைசி  வார்த்தை  தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
**********
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
**********
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
**********
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
**********
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
**********
வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
**********
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
**********
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
**********
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
**********
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
**********
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
**********
'எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
***********
இளமை ஒரு தவறு.
வாலிபம்  ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
**********
மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
**********
உழைத்துப் பார் ,அதிர்ஷ்டம் வரும்.
உறங்கிப்பார்,கஷ்டம் வரும்.
**********
நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
**********
நோயாளிக்கு எப்போதாவது நித்திரை உண்டு.
கடன்காரனுக்கு ஒருபோதும் இல்லை.
**********
அறிவு இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு வருவது இயற்கை .
அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கு அதுவே அர்த்தம்.
**********
சொர்க்கம் போவதற்கு நல்லவர்கள் உழைப்பதை விட
நரகம் போக கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
**********
ஒருவரை கீழே தள்ளுவதற்காகக் குனியாதே.
கீழே விழுந்தவரை மேலே தூக்கிவிடக்குனி.
**********
இனிமையாக வாழ முடியாதவர்கள்,இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள்.
**********
வறுமை என்பது பயந்தவரை அடிக்க வரும் போக்கிரி.
ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது பயந்த சாது.
**********
தூங்குபவனை எழுப்புவதற்காக பொழுது இருமுறை விடிவதில்லை.
**********
விருதுகளும் பட்டங்களும் சராசரி மனிதனுக்கு சிறப்புச் சேர்க்கின்றன.
உயர்ந்த மனிதனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகின்றன.
தாழ்ந்த மனிதரால் அவை களங்கப் படுத்தப்படுகின்றன.
**********
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்.
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்துவிடும்.
**********
எந்தப் பிரச்சினையையும் கடக்கும்போதுதான் வலிக்கும்.பின்னர் நினைக்கும்போது அது ஒரு சுகமான தழும்பு.
**********
வெற்றி,தோல்வி இரண்டுமே விளையாட்டின் முடிவுகள்தான்.நமக்குத் தேவை விளையாட்டின் முடிவுகள் அல்ல.விளையாடும்போது கிடைக்கும் அகமகிழ்வும் பரபரப்பும்தான்.வெற்றி தரும் கரவொலி மைதானத்தில் தங்கி விடுவதில்லை.அது ஒரு நிமிட நேர மகிழ்ச்சி.
**********
தொட்டால் சிணுங்கி இலை கூட நாம் விரலால் தொட்டால்தான் சுருங்கிக் கொள்கிறது.ஆனால் ஒன்றைப் பற்றி மோசமாக நினைத்தாலே போதும்.உடனே மனம் சுருங்கி விடுகிறது.மனிதன் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியாத தாவரம்.
**********
பயம் என்பது என்ன?  தைரியக் குறைவுதான்.
பயத்திலிருந்து வெளியேறுவது எப்படி?பயத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள்.
எது புகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
எது இகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
யார் வாலிபர்? மாறாத குதூகலத்தோடு இருப்பவர் வயதில் கிழவர் கூட வாலிபர்தான்.
யார் கிழவர்? குதூகலமில்லாதவர் வாலிபராயிருந்தாலும் கிழவர்தான்.
**********
ஒரு ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கலாம்.ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
**********
உலகம் முழுவதும் மனிதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
**********
பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.ஆனால்
சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
**********
எல்லோரிடமும் அழகு இருக்கிறது.ஆனால்
எல்லோராலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
**********
உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்?
**********
எப்போதும் நம் எதிர்பார்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள்.உங்களையும் இதே காரணத்துக்காக முட்டாளாகப் பார்க்க நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
**********
ஒவ்வொரு பாலைவனத்திலும் ஒரு சிறிய பசுமையான  சோலையாவது இருக்கிறது.ஆனால் எல்லா ஒட்டகத்தாலும் அதைக் கண்டு பிடிக்க முடிவதில்லை.
**********

பொன்மொழிகள்-

வாழ்வில் திட்டமிடத் தவறுகிறபோது
தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்று பொருள்.
********
தவறுகள் வருந்துவதற்காக அல்ல,திருந்துவதற்காக.
********
உழுகிற மாடு பரதேசம் போனாலும் அங்கும் ஒருவன் கட்டி உழுவான்.
.********
உங்கள் காலணிகள் சரியாகப் பொருந்தும்போது நீங்கள்  அதை மறந்து விடுகிறீர்கள்.
********
அடுத்தவர்கள் சொல்லித் தெரிவது அறிவு.
தானே அனுபவித்து அறிவது ஞானம்.
********
அடிக்கிற ஆளுக்கு சிறிதளவு பலம் போதும்.அடி வாங்குகிறவனுக்குத்தான் பெரும்பலம் வேண்டும்.அடிக்கிற சிற்றுளி பலமானதா,அடி வாங்குகிற பாறை பலமானதா?
********
உன் எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாய் இரு.
அவை எந்த வினாடியும் வார்த்தைகளாக வெளி வரக் கூடும்.
********
இளமை தவறான பலவற்றை நம்புகிறது.
முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.
********
பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்துப் பின் பரீட்சை  வைக்கிறார்கள்.
ஆனால் வாழ்வில்   பல பரீட்சைகளில்  இருந்துதான் பாடம் கற்கிறோம்.
********
புத்திமதி,
அறிவாளிக்குத் தேவையற்றது:
முட்டாளுக்குப் பயனற்றது.
********
இப்படிச் சொல்வதா,அப்படிச் சொல்வதா எனச் சந்தேகம் வந்தால்
உண்மையைச் சொல்லி விடுவதே மேல்.
********



செல்வம் பல நண்பர்களைக் கொண்டு வருகிறது.
துன்பம் அவர்கள் எத்தகையவர்கள் என்று காட்டுகிறது.
******
குற்றத்தை சாமர்த்தியத்தால் அழிக்க முடியாது.
அனுதாபத்தால் அழித்து விடலாம்.
******
பந்தயம் கட்டும் பழக்கம்,
பேராசையின் குழந்தை;பெரிய இடரின் தந்தை.
******
அதிக ஊக்கமும் குறைந்த வேலையும் உடையவர்களே,
சண்டைக்காரர்களாக இருக்கிறார்கள்.
******
உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்.
தன்னை அறிந்தவன் ஆணவம்  கொள்ள மாட்டான்.
******
'அதிர்ஷ்டம்'தராததை 'திருப்தி'யால் பெறலாம்.
******
நீதியைவிட நியாயமாக நடந்து கொள்வதற்குப் பெயர் அன்பு.
******
மனிதர்கள் சில சமயம் உண்மை மீது இடறி விழுவதுண்டு.
ஆனால் பெரும்பாலானோர் எழுந்து நின்று ஏதும்
நடவாதது போல அவசரமாகப் போய்விடுகிறார்கள்.
******
உங்களது கௌரவம் உங்கள் நாக்கு நுனியில் உள்ளது.
******
விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி.
******
மன நிறைவு என்பது இயற்கையான செல்வம்;
ஆடம்பரம் என்பது வலிந்து தேடும் வறுமை.
******
ஒரு தீமையை ஊட்டி வளர்ப்பது
இரண்டு குற்றக் குழந்தைகளை உற்பத்தி செய்யும்.
******
அலங்காரம் செய்வதனால் அகங்காரம் வளரும்;
ஆடம்பரம் செய்வதனால் ஆணவம் ஓங்கும்.
எளிமையின் மூலமே எதையும் வெல்லும் மனத்திண்மை வளரும்.
******
எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் தவறுக்கு துணை நிற்பதில்லை.
******


எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
**********
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
**********
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
**********
வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
**********
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக் காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
**********
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
**********
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
**********
நீ தொலைத்தது நாட்களைத்தான்.
நம்பிக்கையை அல்ல.
**********
தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
**********
நம்முடைய சந்தேகங்கள் நமக்கு துரோகிகள்.
நாம் வெற்றி பெற முடியாதபடி நம்மை பயமுறுத்தி தடுத்து விடுகின்றன.
**********
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை
ஒரு பொறுமைசாலி சாதித்து விடுவான்.
**********
புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.
**********
கருமியின் நெஞ்சம்  சாத்தானின்  இருப்பிடம் .
**********
நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.
**********
முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான்.
**********
நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.
**********
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்.
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.
**********
முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன்
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.
**********
அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள்.
**********
முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
**********
எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு.
**********



ஒரு பழக்கத்தை சும்மா ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விட முடியாது.தாஜா செய்து ஒவ்வொரு படியாகக் கீழே இறக்கிக் கொண்டு வர வேண்டும்.
**********
பணம்  பேசக்  கூடியது  மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும்.
**********
ஒவ்வொரு திறமை வாய்ந்த மனிதனின் மூளையிலும் முட்டாள் தனமான பக்கம் ஒன்று கட்டாயம் உண்டு.
**********
சிறு கேள்விகளுக்கு நீண்ட விடை அளிப்பவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவன் எதையோ மறைக்கிறான்.
**********
முகஸ்துதி உப்பைப் போன்றது.கொஞ்சம் உபயோகித்தால் தான் ருசியாய் இருக்கும்.அதிகமானால் கரிப்பாக இருக்கும்.  
**********
இரண்டு நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள்.செய்தால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.
இரண்டு அன்னியர்களிடையே மத்தியஸ்தம் செய்யுங்கள்.செய்தால் ஒரு நண்பன் கிடைப்பான்.
**********
அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள்.
**********
நாம் அனைவரும் மரண தண்டனைக்குள்ளானவர்கள் தான்.தூக்கிடும் நாள் தான் வித்தியாசம்.
**********
செய்து காட்டுபவர்கள்தான் குழந்தைக்குத் தேவை.குறை காண்பவர்கள் அல்ல.
**********
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் மூடன்.
ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை.
தன்னை அறியாமல் தவறு செய்து பின் திருத்திக் கொள்பவன் மனிதன்.
**********

பொன்மொழிகள்

முட்டாளின் மேலான ஞானம் மௌனம்.
அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.
********
மௌனம் நூறு தடைகளை வென்றுவிடும்.
********
பேச்சினால் பின்னர் வருந்த நேர்கிறது.
மௌனத்தால் அப்படி நேர்வதில்லை.
********
உண்மையான மௌனம் உள்ளத்திற்கு ஓய்வளிக்கும்.
********
மௌனமாயிருந்து மூடனாகக் கருதப்படுவது,சந்தேகமில்லாமல் ,பேசி மூடன் என்று காட்டிக் கொள்வதைவிட மேலானது,
********
நீ அமைதியாக வாழ விரும்பினால்,கேள்;பார்;அனால் மௌனமாயிரு .
********
மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப் பேசவும் தெரியாது.
********
மௌனம் என்ற மரத்தில் அமைதி என்னும் கனி தொங்குகிறது.
********
உன்னைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக எண்ண  வேண்டுமானால் மௌனமாயிருக்க வேண்டும்.
********
மௌனம் என்பது சிந்தனையின் கூடு.
********
மூடிய வாயின் இசை இனியது.
********
ஒருவனுடைய வாய்ப் பேச்சைவிட அவனது மௌனம் அதிகமாக எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.
********
மிக ஆழமான கடல், பணம்தான்.இந்தப் பணக்கடலில் உண்மை, மனசாட்சி, கௌரவம் ஆகிய அனைத்தும் அடியோடு மூழ்கி விடுகின்றன.
********
நீங்கள் நேர்மையான மனிதர் என்றால் நீங்கள் முன்னேற உங்களுக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தைரியம் மட்டுமே.
********
மனிதர்கள் இரண்டு அழுக்குக் கைகளைப்போல:ஒன்றினால்தான் மற்றொன்றின் அழுக்கைப் போக்க முடியும்.
********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது பலவீனமான கொள்கையின் அறிகுறி.
********
எல்லாம் வேடிக்கைதான்:நமக்கு நடக்காமல் அடுத்தவர்களுக்கு நடக்கும் வரை.
********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
********
அவிழ்க்க முடிந்ததை
அறுக்க வேண்டியதில்லை.
********
குழந்தைகளின் உதட்டிலும் உள்ளத்திலும் உள்ள ஆண்டவனின் பெயர் அம்மா.
********
கும்பலுக்குப் பல தலைகள்:
மூளைதான் இல்லை.
********
நமது சமதர்ம ஆர்வத்தில் ஒரே ஒரு சிக்கல்!நாம் நம்மிலும் மேலோரிடம் மட்டும்தான் சமத்துவம் பாராட்ட விரும்புகிறோம்.
********
கோபம் என்பது ஒரு விலை மிகுந்த தவிர்க்க முடியாத பொருள்.அந்தப் பொருளை செலவழிக்கும்போது மனிதர்களுக்குக் கிடைக்கும் ஒரே லாபம் மனதிருப்திதான்.
********
பிறர் மகிழ்ச்சியாக இருக்க எப்போது வழி கண்டு பிடித்துக் கொடுக்கிறீர்களோ அப்போது முதலே நீங்கள் இன்பமாக இருக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
********
என் குறைகளைக் கண்டு நானே உள்ளூரச் சிரித்துக் கொள்ளும்போது எனது மனச்சுமை குறைகிறது.
********
உழைப்பு எந்த மனிதனையும் ஏமாற்றுவதில்லை.
மனிதன்தான் உழைப்பை ஏமாற்றுகிறான்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலைதான் மனிதனைக் கொல்லும் .
********
உலகில் மிகச் சிறந்தவை எவை?உப்பின் ருசி,குழந்தையின் அன்பு,உணவின் மணம் .
********
விடைக்கு ஏற்றமாதிரி கேள்வியை மாற்றிக் கொள்ளுங்கள்.சமரசம் என்பது அதுதான்.
********
வாழ்வில்,
தென்னை மாதிரி வளர வேண்டும்:
நாணல் மாதிரி வளைய வேண்டும்.:
வாழை மாதிரி வாரி வழங்க வேண்டும்.
********
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முயற்சி செய்வதைக் காட்டிலும்
'மகிழ்ச்சியாக நாங்கள் வாழ்கிறோம்,'என்று பிறர் நம்பும்படி செய்வதற்குத்தான் நம்மில் பலர் அதிக முயற்சி எடுத்துக் கொள்கிறோம்.
********
அறியாமல் இருப்பது தவறு அல்ல:
அறிய முயற்சி செய்யாமலிருப்பதே மாபெரும் தவறு.
********
இளமையாக இருக்கும்போது ரோஜா மலர்கள் மீது படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மீது படுக்க நேரிடும்.
இளமையில் தனது தோலை  கடினமாக்கிக் கொண்டவனுக்கு
முதுமையில் முட்கள் குத்தினாலும் வலிக்காது.
********
இசையைக் கேட்டுக் கொண்டே இரவு உணவை உண்பது,உணவை சமைத்த சமையல் காரனையும் ,இசையை இசைத்த கலைஞனையும் அவமானப் படுத்துவதாகும்.
********
சில விவாதங்களுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.ஆனால் முடிவு என்ற ஒன்று இருப்பதில்லை.
********
பணிவு ஒருபோதும் பலவீனம் அல்ல.உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்.
********
உங்கள் முகத்தில் புன்னகையின் ஒளிக்கீற்று இல்லையென்றால் நீங்கள் முழுமையாக உடை உடுத்தியவர் ஆக மாட்டீர்கள்.
********
வாழ்க்கையில் கடினமான மூன்று விஷயங்கள்:
*ஒரு  ரகசியத்தை பாதுகாப்பது.
**மனதில் ஏற்பட்ட ஒரு வலியை மறப்பது.
***ஓய்வு நேரத்தை பலனுள்ளதாகச் செய்வது.
********
ஆயிரம் தெய்வங்களின் மீது நம்பிக்கை வைத்துவிட்டு,உன் மீது நம்பிக்கை வைக்காமல் போனால் உன்னை விடப் பெரிய நாத்திகன் உலகில் யாரும் இல்லை.
********
நான் வசிப்பது ரொம்ப சிறிய சாதாரண வீடுதான்.ஆனால் என் வீட்டு ஜன்னல் வழியாக பரந்து விரிந்த உலகம் தெரிகின்றதே!
  ********
வெற்றியைக் கொண்டாடும்போது தோற்றவர்களைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.அங்கே நாம் வெற்றியின் மூலம் அசிங்கமாகிப் போகிறோம்.
********
பொறாமை ஏற்படுத்துகிற ஞாபகங்களைவிட அது நம் கண்களில் இருந்து மறைக்கும் உண்மைகள் அதிகம்.
********
மகிழ்ச்சி என்பது பிரச்சினைகளே இல்லாத நிலையில் இல்லை: பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
********

பொன்மொழிகள்

பசி ருசி அறியாது.
வறுமை வட்டி அறியாது.
******
பல பெரிய செயல்கள் வல்லமையினால் நிறைவேறுவதில்லை.
விடா முயற்சியினாலேயே நிறைவேறுகின்றன.
******
பிறரை விடத்தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன்
எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான்.
******
மற்றவர்களுக்கு நன்மை என்று நினைப்பவன்
தனக்கான நன்மையை ஏற்கனவே சம்பாதித்து விட்டான்.
******
எல்லா மக்களும் தாங்கள் ஒருவரைப் பற்றிஒருவர் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால்,உலகில் நான்கு நண்பர்கள் கூட சேர்ந்திருக்க மாட்டார்கள்.
******
ஏராளமான வாய்ப்புகள் வரும்போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைசியில் மோசமான ஒன்று கிடைத்துவிடும்.
******
கொடுக்கும்போது தயங்காதே.
இழக்கும்போது வருந்தாதே.
சம்பாதிக்கும்போது பேராசைப் படாதே.
******
முழுவதும் பொய்யான பொய்யோடு முழு பலத்தோடு போர் புரிய முடியும். ஆனால் மெய் கலந்த பொய்யோடு போர் புரிதல் மிகவும் கடினமான செயல்.
******
ஒருவன் பொய் சொல்லும்போது அவனைப் பற்றிய மதிப்பு பத்து சதம் உயரலாம்.ஆனால் உண்மை வெளிப்படும்போது ஐம்பது சதம் மதிப்பு குறைந்து விடும்.
******
ஓயாது சொட்டும் நீர்
ஓட்டையாக்கிவிடும் கல்லை.
******
அவரவர் அருகதைக்கேற்ப அனைவரையும் நடத்தினால்,கசையடியிலிருந்து தப்புவோர் எவரும் இருக்க முடியாது .
******
புகழும்போது வெட்கப்பட்டும்,அவமானப்படுத்தப் படும்போது அமைதியாகவும் இருந்து பழக்கப் பட்டவன் எவனோ அவனே  மேம்பட்டவன்.
******
பணம் தலை குனிந்து பணியாற்றும்:அல்லது
தலை குப்புறத் தள்ளிவிடும்.
******
நம்பிக்கைவாதி  ரோஜாவைப் பார்க்கிறான்,முட்களை அல்ல.
அவ நம்பிக்கையாளன் முட்களைப் பார்க்கிறான்,ரோஜாவை அல்ல.
******
சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்.
செயல்கள் தங்கத் துளிகள்.
******
செல்வத்தை மதிப்பு மிக்க பொருளாய் இறைவன்  நினைத்திருந்தால், திருத்தவே முடியாதபடி  வாழ்ந்து வரும் தரங்கெட்ட கயவர்களிடம் அச்செல்வத்தை சேர்த்திருப்பாரா?
******
நீதியானது அரக்கனைக்கூட தவறாகத் தண்டித்து விடக்கூடாது.
******
மனிதன் குறையுடையவன் மட்டும் அல்ல,குறை காண்பவனும் ஆவான்.பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன்  குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
உலகில் அடக்க முடியாத  அசுரன் அலட்சியம்.
******
பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான சுயநலமே ஆகும்.
******
காரணம் இல்லாமல் யாரும் கோபப் படுவதில்லை.ஆனால் அது சரியான காரணமா என்பதுதான் கேள்வி
******
ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறியலாம்.
******
எவனிடம் வீரமில்லாத ஒழுக்கமோ,ஒழுக்கம் இல்லாத வீரமோ உள்ளதோ அவனே கோழை.
******
ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பன் வேறில்லை.
******
பொருளற்றவனைக் காட்டிலும் பொருளுடையவனே மிகவும் துன்புறுகிறான்.
******
மற்றவருக்கு ஆறுதல் சொல்லும்போது இருக்கும் தைரியம் தனக்கு தேவைப்படும்போது இருப்பதில்லை.
******
திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
******
சிக்கனமாக இல்லாதவன் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
******
புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து.
******
உலகிற்கு மனிதன் தனியாக வருவதுபோல உலகிலிருந்து தனியாகவே போகிறான்.
******
எதிரி ஓடிவிட்டால் எவனும் வீரன்தான்.
******
வறுமையில் கசந்தால்தான் செல்வத்தின் இனிமை தெரியும்.
******
செயலே புகழ் பரப்பும்;வாய் அல்ல.
******
சிரிப்பு,குழந்தை உலகின் இசை.
******
சோம்பல் மிக மெதுவாக நடப்பதால்
வறுமை அவனை எளிதில் பிடித்து விடுகிறது.
********
நன்றியும் கோதுமையும் நல்ல இடத்தில்தான் விளையும்.
********
குற்றம் என்ற புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
********
  உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன் ஆகிறான்.
********
வெளியே  காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்.
********
ஒரு பூனை திருட்டுப் போயிற்று என்று சட்டத்தின் உதவியை நாடினால்
ஒரு பசுவை விற்கே வேண்டிய நிலை வந்துவிடும்.
********
எக்காரியத்தையும் தயங்கித் தயங்கிச் செய்பவன்
ஒரு காரியத்தையும் செய்து முடிக்க மாட்டான்.
********
தவறாக புரிந்து கொள்கிற உண்மையைக் காட்டிலும் பெரிய பொய் வேறு எதுவும் இல்லை.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க வார்த்தை வந்துவிட்டால், முன்னால்  சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதற்கு இல்லை என்று மறுப்பதோ அவமானப் படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன.முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
********
துயரங்களை எதிர்பார்ப்பவன் இரண்டு முறை துயரம் அடைகிறான்.
********
புறாவைப்போல பறந்துவிடும் பேச்சை
நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுக்க முடியாது.
********

பொன்மொழிகள்


ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணி பத்திரப் படுத்தக் கூடாது.
******
எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்,
என்ன நேர்ந்திருந்தாலும் சரி.
******
அறிவாளி கண்களால் பேசுகிறான்:
முட்டாள் காதுகளால் விழுங்குகிறான்.
******
நன்மைகள் செய்பவன் என் உணர்ச்சியைத் துன்புறுத்துகிறான்.
புகழைத் தருபவன் என் வாழ்வைப் புண்படுத்துகிறான்.
******
உன்னதமான காரியத்தை செய்ய யாருக்கு நிர்ப்பந்தம் தேவைப்படுகிறதோ,அவன் அதை என்றும் முடிக்க மாட்டான்.
******
சொந்த விஷயம் என்றால் சுயநல வாதிகளாகி விடுகிறோம்.
அடுத்தவர் விஷயம் என்றால் லட்சிய வாதிகளாகி விடுகிறோம்.
******
ஓய்வு என்பது மட்டமான சொல்,
அது எந்த மொழியிலாயினும் சரி.
******
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்.
ஏனெனில் அதற்கு ஒரு நாளைக் கொடுத்தால்,அது அடுத்த நாளையும் திருடிக் கொண்டுவிடும்.
******
அனுபவம் என்பது இரண்டாவது முறை தவறு செய்யும்போது சுரீர் என உணர்த்துவது.
******
தோல்வி என்பது முனைப்பில்லாத முயற்சிக்குக் கிடைக்கும் பரிசு.
******
வயது விஷயத்தை பெரிதாய் நினைக்காதீர்கள்.உங்களுக்கு ஒரு வயது ஏறி விட்டதென்றால் எல்லோருக்கும்தான் ஒரு வயது ஏறுகிறது.
******
இவன் ஒரு முட்டாளோ என்று நாலு பேர் சந்தேகப்பட்டாலும் பரவாயில்லை.வாயைத் திறவாமல் இருப்பதே மேல்.--வாயைத் திறந்து அந்த சந்தேகத்தை உறுதிப் படுத்துவதைக் காட்டிலும்.
******

Friday 25 January 2013

மகாகவி பாரதியார் கவிதைகள்




தேசீய கீதங்கள்

1.பாரத நாடு
1. வந்தே மாதரம்
2. வந்தே மாதரம்
3. வந்தே மாதரம்
4. பாரத நாடு
5. பாரத தேசம்
6. எங்கள் நாடு 7. ஜயபாரதம்!
8. பாரத மாதா 9. எங்கள் தாய்
10. வெறி கொண்ட தாய் 11. பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி
12. பாரத மாதா நவரத்தின மாலை 13. பாரத தேவியின் திருத்தசாங்கம்
14. தாயின் மணிக்கொடி 15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
16. போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும் 17. பாரத சமுதாயம்
18. ஜாதீய கீதம்-1(மொழிபெயர்ப்பு) 19. ஜாதீய கீதம்-2(புதிய மொழி பெயர்ப்பு)
2.தமிழ் நாடு
20. செந்தமிழ் நாடு 21. தமிழ்த் தாய்
22. தமிழ் 23. தமிழ்மொழி வாழ்த்து
24. தமிழ்ச் சாதி 25. வாழிய செந்தமிழ்
3.சுதந்திரம்
26. சுதந்திரப் பெருமை 27. சுதந்திரப் பயிர்
28. சுதந்திர தாகம் 29. சுதந்திர தேவியின் துதி
30. விடுதலை 31. சுதந்திரப் பள்ளு
4. தேசீய இயக்கப் பாடல்கள்
32. சத்ரபதி சிவாஜி 33. கோக்கலே சாமியார் பாடல்
34. தொண்டு செய்யும் அடிமை 35. நம்ம ஜாதிக்கு அடுக்குமோ?
36. நாம் என்ன செய்வோம்! 37. பாரத தேவியின் அடிமை
38. வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று 39. தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி
40. நடிப்புச் சுதேசிகள்
5. தேசீயத் தலைவர்கள்
41. மகாத்மா காந்தி பஞ்சகம் 42. குரு கோவிந்தர்
43. தாதாபாய் நவுரோஜி 44. பூபேந்திரர் விஜயம்
45. வாழ்க திலகன் நாமம் 46. திலகர் முனிவன் கோன்
47. லாஜபதி 48. லாஜபதியின் பிரலாபம்
49. வ.உ.சி.-க்கு வாழ்த்து
6. பிற நாடுகள்
50. மாஜினியின் சபதம் 51. பெல்ஜியத்திற்கு வாழ்த்து
52. புதிய ருஷியா 53. கரும்புத் தோட்டத்திலே

இரண்டாம் பாகம்

தெய்வப் பாடல்கள்

1. தோத்திப் பாடல்கள்
1. விநாயகர் நான்மணி மாலை 2. முருகா! முருகா!
3. வேலன் பாட்டு 4. கிளிவிடு தூது
5. முருகன் பாட்டு 6. வள்ளிப் பாட்டு-1
7. வள்ளிப் பாட்டு-2 8. இறைவா! இறைவா!
9. போற்றி அகவல் 10. சிவ சக்தி
11. காணி நிலம் வேண்டும் 12. நல்லதோர் வீணை
13. மஹாசக்திக்கு விண்ணப்பம் 14. அன்னையை வேண்டுதல்
15. பூலோக குமாரி 16. மஹாசக்தி வெண்பா
17. ஓம் சக்தி 18. பராசக்தி
19. சக்திக் கூத்து 20. சக்தி
21. வையம் முழுதும் 22. சக்தி விளக்கம்
23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் 24. சக்தி திருப்புகழ்
25. சிவசக்தி புகழ் 26. பேதை நெஞ்சே
27. மஹாசக்தி 28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)
29. காளிப்பாட்டு 30. காளி ஸ்த்தோத்திரம்
31. யோக சித்தி 32. மகா சக்தி பஞ்சகம்
33. மஹாசக்தி வாழ்த்து 34. ஊழிக்கூத்து
35. காளிக்குச் சமர்ப்பணம் 36. காளி தருவாள்
37. மஹா காளியின் புகழ் 38. வெற்றி
39. முத்துமாரி 40. தேச முத்துமாரி
41. கோமதி மஹிமை 42. சாகா வரம்
43. கோவிந்தன் பாட்டு 44. கண்ணனை வேண்டுதல்
45. வருவாய் கண்ணா! 46. கண்ண பெருமானே!
47. நந்த லாலா 48. கண்ணன் பிறப்பு
49. கண்ணன் திருவடி 50. வேய்ங்குழல்
51. கண்ணம்மாவின் காதல் 52. கண்ணம்மாவின் நினைப்பு
53. மனப் பீடம் 54. கண்ணம்மாவின் எழில்
55. திருக்காதல் 56. திருவேட்கை
57. திருமகள் துதி 58. திருமகளைச் சரண்புகுதல்
59. ராதைப் பாட்டு 60. கலைமகளை வேண்டுதல்
61. வெள்ளைத் தாமரை 62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)
63. மூன்று காதல் 64. ஆறு துணை
65. விடுதலை வெண்பா 66. ஜெயம் உண்டு
67. ஆரிய தரிசனம் 68. சூரிய தரிசனம்
69. ஞாயிறு வணக்கம் 70. ஞானபாநு
71. சோமதேவன் புகழ் 72. வெண்ணிலாவே!
73. தீ வளர்த்திடுவோம்! 74. வேள்வித் தீ
75. கிளிப் பாட்டு 76. யேசு கிறிஸ்து
77. அல்லா
2. ஞானப் பாடல்கள்
78. அச்சமில்லை 79. ஜெய பேரிகை
80. சிட்டுக் குருவியைக் போலே 81. விடுதலை வேண்டும்
82. வேண்டும் 83. ஆத்ம ஜெயம்
84. காலனுக்கு உரைத்தல் 85. மாயையைப் பழித்தல்
86. சங்கு 87. அறிவே தெய்வம்
88. பரசிவ வெள்ளம் 89. பொய்யோ?மெய்யோ
90. நான் 91. சித்தாந்தச் சாமி கோயில்
92. பக்தி 93. அம்மாக்கண்ணு பாட்டு
94. வண்டிக்காரன் பாட்டு 95. கடமை அறிவோம்
96. அன்பு செய்தல் 97. சென்றது மீளாது
98. மனத்திற்குக் கட்டளை 99. மணப் பெண்
100. பகைவனுக்குகருள்வாய் 101. தெளிவு
102. கற்பனையூர்

மூன்றாம் பாகம்

பல்வகைப் பாடல்கள்

1. நீதி
1. புதிய ஆத்திசூடி 2. பாப்பாப் பாட்டு
3. முரசு
2.சமூகம்
4. புதுமைப் பெண் 5. பெண்கள் வாழ்க!
6. பெண்கள் விடுதலைக்கும்மி 7. பெண் விடுதலை
8. தொழில் 9. மறவன் பாட்டு
10. நாட்டுக் கல்வி 11. புதிய கோணங்கி
3.தனிப் பாடல்கள்
12. காலைப் பொழுது 13. அந்திப் பொழுது
14. நிலாவும் வான்மீனும் காற்றும் 15. மழை
16. புயற் காற்று 17. பிழைத்த தென்னந்தோப்பு
18. அக்கினிக் குஞ்சு 19. சாதாரண வருஷத்துத் தூமகேது
20. அழகுத் தெய்வம் 21. ஒளியும் இருளும்
22. சொல் 23. கவிதைத் தலைவி
24. கவிதைத் காதலி 25. மது
26. சந்திரமதி
4. சான்றோர்
27. தாயுமானவர் வாழ்த்து 28. நிவேதிதா
29. அபேதாநந்தா 30. ஓவியர்மணி இரவிவர்மா
31. சுப்பராம தீட்சிதர் 32. மகாமகோபாத்தியாயர்
33. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி 34. ஹிந்து மதாபிமான சங்கத்தார்
35. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
5. சுய சரிதை
36. கனவு 37. பாரதி அறுபத்தாறு
6. வசன கவிதை
38. காட்சி 39. சக்தி
40. காற்று 41. கடல்
42. ஜகத் சித்திரம் 43. விடுதலை

நான்காம் பாகம்

முப்பெரும் பாடல்கள்

1. கண்ணன் பாட்டு
1. கண்ணன்-என் தோழன் 2. கண்ணன்-என் தாய்
3. கண்ணன்-என் தந்தை 4. கண்ணன்-என் சேவகன்
5. கண்ணன்-என் அரசன் 6. கண்ணன்-என் சீடன்
7. கண்ணன்-என் சற்குரு 8. கண்ணம்மா-என் குழந்தை
9. கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை 10. கண்ணன்-என் காதலன்
11. கண்ணன்-உறக்கமும் விழிப்பும் 12. கண்ணன்-காட்டிலே தேடுதல்
13. கண்ணன்-பாங்கியைத் தூது விடுத்தல் 14. கண்ணன்-பிரிவாற்றாமை
15. கண்ணன்-என் காந்தன் 16. கண்ணம்மா-என் காதலி காட்சி வியப்பு
17. கண்ணம்மா-என் பின்னே வந்து நின்று கண் மறைத்தல் 18. கண்ணம்மா-என் முத்திரை களைதல்
19. கண்ணம்மா-என் நாணிக் கண் புதைத்தல் 20. கண்ணம்மா-என் குறிப்பிடம் தவறியது
21. கண்ணம்மா-என் யோகம் 22. கண்ணம்மா-என் ஆண்டான்
23. கண்ணம்மா- எனது குலதெய்வம்
2. பாஞ்சாலி சபதம் முதற் பாகம்
துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்
1. பிரம்ம ஸ்துதி 2. சரஸ்வதி வணக்கம்
3. ஹஸ்தினாபுரம் 4. துரியோதனன் சபை
5. துரியோதனன் பொறாமை 6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது
7. சகுனியின் சதி 8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
9. திரிதராட்டிரன் பதில் கூறுதல் 10. துரியோதனன் சினங் கொள்ளுதல்
11. துரியோதனன் தீமொழி 12. திரிதராட்டிரன் பதில்
13. துரியோதனன் பதில் 14. திரிதராட்டிரன் சம்மதித்தல்
15. சபா நிர்மாணம் 16. விதுரனைத் தூது விடல்
17. விதுரன் தூது செல்லுதல் 18. விதுரனை வரவேற்றல்
19. விதுரன் அழைத்தல் 20. தருமபுத்திரன் பதில்
21. விதுரன் பதில் 22. தருமபுத்திரன் தீர்மாணம்
23. வீமனுடைய வீரப்பேச்சு 24. தருமபுத்திரன் முடிவுரை
25. நால்வரும் சம்மதித்தல் 26. பாண்டவர் பயணமாதல்
27. மாலை வருணனை
சூதாட்டச் சருக்கம்
28. வாணியை வேண்டுதல் 29. பாண்டவர் வரவேற்பு
30. பாண்டவர் சபைக்கு வருதல் 31. சூதுக்கு அழைத்தல்
32. தருமன் மறுத்தல் 33. சகுனியின் ஏச்சு
34. தருமனின் பதில் 35. சகுனி வல்லுக்கு அழைத்தல்
36. தருமன் இணங்குதல் 37. சூதாடல்
38. நாட்டை வைத்தாடுதல்

இரண்டாம் பாகம்

அடிமைச் சருக்கம்
39. பராசக்தி வணக்கம் 40. சரஸ்வதி வணக்கம்
41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல் 42. விதுரன் சொல்வது
43. சூது மீட்டும் தொடங்குதல் 44. சகுனி சொல்வது
45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல் 46. நகுலனை இழத்தல்
47. பார்த்தனை இழத்தல் 48. வீமனை இழத்தல்
49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல் 50. துரியோதனன் சொல்வது
51. சகுனி சொல்வது
திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்
52. திரௌபதியை இழத்தல் 53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி
54. துரியோதனன் சொல்வது 55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்
56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது 57. விதுரன் சொல்வது
58. துரியோதனன் சொல்வது 59. திரௌபதி சொல்லுதல்
60. துரியோதனன் சொல்வது
சபதக் சருக்கம்
61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல் 62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்
63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல் 64. வீட்டுமாசார்யன் சொல்வது
65 திரௌபதி சொல்வது 66. வீமன் சொல்வது
67. அர்ஜீனன் சொல்வது 68. விகர்ணன் சொல்வது
69. கர்ணன் பதில் 70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
71. வீமன் செய்த சபதம் 72. அர்ஜீனன் சபதம்
73. பாஞ்சாலி சபதம்
3. குயில் பாட்டு
1. குயில் 2. குயிலின் பாட்டு
3. குயிலின் காதற் கதை 4. காதலோ காதல்
5. குயிலும் குரங்கும் 6. இருளும் ஒளியும்
7. குயிலும் மாடும் 8. நான்காம் நாள்
9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்
புதிதாகச் சேர்க்கப் பெற்ற பாடல்கள்
1. உயிர் பெற்ற தமிழர் பாட்டு 2. இளசை ஒருபா ஒருபஃது